Monday 14 November 2016

ஜாவா ஒரு போர்ட்டபிள் மொழி(எப்படி?).-ஜாவா பாடம்-2



                                                                                 ----முத்து கார்த்திகேயன்,  மதுரை
       



(java is a portable language how?).

ஜாவானது நிறைய பணித்தளங்களில்(platform) இயங்கக் கூடியது
.windows1/,8/7/vista/ xp/7/95/98,linux,unix என்று எல்லா இயக்க முறைமைகளிலும் பயன்படுத்தக்கூடியது.
எப்படியென்றால் ஜாவா நிரலானது நேரடியாக உங்கள் கணினியில் இயங்காது. உங்கள் கணினியில் உள்ளினைக்கப்பட்டுள்ள jvm(java virtual machine)ல் தான் இயங்கும்.

ஜாவா கம்பைலரானது முதலில் ஜாவா நிரலை கம்பைல் செய்து byte code ஆக மாற்றுகின்றது.
பைட் கோடானது jvm க்கு machine instruction ஆக உள்ளீடு செய்யப்படுகின்றது.
அவை jvmல் உள்ள இன்டெர்பிரட்டெரால்(interpreter)  interpret செய்யப்பட்டு இயக்கப் படுகின்றது.
Jvm ஆனது தனியாகவோ அல்லது உலாவியுடனோ(browser) இணைக்கப்பட்டு இயங்குகின்றது.
ஜாவானது machine code ஆக இல்லாமல் bytecode ஆக உள்ளதால் கணினியின் வன்பொருளில் இருந்து பிரிக்கப்பட்டு இயங்குகின்றது.எனவே அனுமதிக்கப்படாத operations தடை செய்யப் படுகின்றது.

 

 

ஜாவா நிரல் அறிமுகம்.                                          

//Welcome.java
Public Class Welcome
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.println(“Hello,world”);
}
}
மேலே உள்ள நிரலில் Welcome என்ற class க்குள் main method உள்ளது.
ஒவ்வொரு நிரலிலும் ஒரு class கட்டாயம் இருக்கும்.
இங்கே class  பெயரானது Welcome என இருக்கின்றது.
convention படி classன் பெயரின் ஒவ்வொரு வார்த்தையும் capital letter  லில் ஆரம்பிக்கிறது. (ex :HelloWorld).
பொதுவாக ஜாவாவில் classன் பெயரானது identifier எனப்படுகின்றது.
Identifier ல் கேரக்டர்,எண்கள்,அன்டர்ஸ்கோர், $ குறீயீடு வ்ரலாம். எனினும் எண்களுடன் ஆரம்பிக்கக்கூடாது.
பெயரில் இடைவெளி வரக்கூடாது.
Input1—valid
1input—invalid.
ஜாவாவானது case sensitive மொழியாகும்.
// main method வரி
//ன் தொடங்குவது இது comment line என்பதைக்குறிக்கின்றது.
Comment line ஆனது இயக்கப்படாது.
இது நிரலாளரின் நிரலை பற்றிய குறிப்பாகும்.
// என தொடங்குவது ஒற்றை வரி குறிப்பாகும்
உதாரணம்
// single line
பல் வரி குறிப்பானது/
/* என தொடங்கி */ என முடிகின்றது.
/* this is a
Multi line
Comment */
Public static void main(String{} args) வரி
இது தான் ஒவ்வொரு ஜாவா நிரலின் முதலில் இயக்கப்படும் வரியாகும்.
ஒவ்வொரு ஜாவா நிரலிலும் ஒரு main method கட்டாயம் வேண்டும்.
இல்லையென்றால் jvm  ஆனது ஜாவா நிரலை இயக்காது.
{ மற்றும் } main method ன் எல்லையைக் குறிக்கின்றது.
Void keyword ஆனது main method எதையும் திருப்பி அனுப்பாது என்பதைக் குறிக்கின்றது.
 System.out.println(“Hello,world”);  வரியானது
Hello World  என பிரிண்ட் செய்யும்.
System.out என்பது standard output object ஆகும்.
இது command window ல் string ஐ வெளியீடு செய்யப் பயன்படுகின்றது.
--

முதலில்பார்த்த நிரலை சற்று மாற்றிப் பார்ப்போம்.
Public Class Welcome2
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.println(“Hello\n,world”);
}
}
வழக்கம் போல println  வழிமுறையானது(method) output செய்ய பயன்படுத்தப் பட்டுள்ளது,
இந்த நிரலின் வெளியீடானது பின் வருமாறு இருக்கும்.
Hello
World
ஏன் multiple lines?
காரணம் நாம் உபயொகப்படுத்திய்ள்ள ‘\n’ ஆகும்.println வரியில் hello வுக்கும் world க்கும் ந்டுவில் ‘\n’ இருப்பதைக் கவனியுங்கள்.’\n’ என்பது escape sequencelல் ஒன்றாகும்.இது new line character என்று அழைக்கப்படுகின்றது..
Printf மூலம் வெளியீடு செய்தல்.
Public Class Welcome3
{
//main method
Public static void main(String[] args)
{
System.out.printf(“%s\n%s”,”welcome to”,”java language”);
}
}
System.out.printf என்பது formatted output செய்யப் பயன்படுகின்றது.
System.out.printf(“%s\n%s”,”welcome to”,”java language”);
%s என்பது stringகிற்கான format specifier ஆகும்.
Format specifier  என்பது  % குறியீட்டுடன் ஆரம்பிக்கின்றன.s என்பது string ஐ குறிக்கின்றது. %d என்றால் integer மற்றும் %f என்றால் float ஆகும்.
மேலே உள்ள நிரல் வரியில் முதலில் உள்ள %s ஆனது “welcome to”வால் replace செய்யப்படுகின்றது. இரண்டாவதாக வரும் %s ஆனது “java language”என்பதால் replace செய்யப்படுகின்றது.
இதன் வெளியீடானது
Welcome to
Java language
என இருக்கும்.
Multiple lines வெளியீட்டிற்கு காரணம் “\n” printf statementல் உபயோகிக்கிப்பட்டிருப்பது தான்.



 


















.






No comments:

Post a Comment